Monday 6th of May 2024 11:32:52 AM GMT

LANGUAGE - TAMIL
-
இராணுவ ஆட்சியை வலியுறுத்தி  சூடானில் பாரிய ஆா்ப்பாட்டம்!

இராணுவ ஆட்சியை வலியுறுத்தி சூடானில் பாரிய ஆா்ப்பாட்டம்!


சூடானில் இராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று ஆா்ப்பாட்டப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சூடானில் ஜனாநாயக ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவினர் நேற்று சனிக்கிழமை கார்ட்டூம் தெருக்களில் தெருக்களில் ஒன்றுகூடி ஆட்சிப் பொறுப்பை இராணுவம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கோஷமிட்டனர்.

நாட்டின் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே திரண்டு இராணுவ ஆட்சியை வலியுறுத்தினர்.

ஜனாதிபதி உமர் அல்-பஷீர் தலைமையிலான ஆட்சி 2019 இல் கவிழ்க்கப்பட்டதில் இருந்து சுதந்திரம் மற்றும் மாற்றத்துக்கான படை (Forces of Freedom and Change - FFC) என்று அழைக்கப்படும் இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்த கூட்டமைப்பு நாட்டில் ஆட்சி செய்து வருகிறது.

இந்த கூட்டமைப்பு தான் பஷீருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுத்தது.

இந்நிலையில் எங்களுக்கு இராணுவ ஆட்சி வேண்டும், தற்போதைய அரசு நீதி மற்றும் சமத்துவத்தை எங்களுக்கு வழங்கவில்லை போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எனினும், இந்த கோரிக்கைகள் ஜனாநாயாக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் தந்திரத்தின் ஒரு பகுதி என்று சிவில் ஆட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, நாட்டில் முந்தைய ஆர்ப்பாட்டங்களைப் போலல்லாமல் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயில்கள் வரைச் செல்ல நேற்று அனுதிக்கப்பட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இதற்கிடையில் நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அரசு சார்புக் குழுக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன.


Category: செய்திகள், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE